கலாவாணி சன சமூக நிலையத்தின் கீதம்...
கலாவாணியே நீ வாழி!.....
கம்பர்மலை சன சமூக நிலையம்
வாழிய வாழியவே! - எங்கள்
முந்தையர் தம்முயிர் போலவளர்த்த
மூலாதாரம் வாழியவே! - கம்பர்மலை
கல்வி சிறந்திட கருணை மலிந்திட
பல்வித கலைகள் பரந்து செறிந்திட
நல்வித அறிவியல் ஞானம் வளர்ந்திட
கொல் மத இனமொழிபேதம் அடங்கிட - கம்பர்மலை
ஒற்றுமை ஓங்கி உறவு மிளிர்ந்திட
சற்குண சீலம் தழைத்துப் பொலிந்திட
பற்பல நற்பணி பரந்து வளர்ந்துயர்
வித்தகராய் எமை மேதினி வாழ்த்திட - கம்பர்மலை
எம்மை இங்கீன்று இனிது வளர்த்த நம்
அன்னையர் தந்தையர் சின்னஞ் சிறுவராய்
மண்ணை அணைந்து மதலைகள் பேசிய
புண்ணிய பூமியில் தண்ணொளி வீசிடும் - கம்பர்மலை
நமது மூதாதையர் நயமுறக் காட்டிய
நெஞ்சத் துணிவுடன் நேசிய வீரமும்
பயனுறும் ஐக்கிய பணிகளும் தொண்டும்
வியனுல கெங்கணும் மேவிச் சிறந்திட - கம்பர்மலை
ஆக்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.கே.தங்கவடிவேல்